இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவை நோக்கி படகில் செல்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில், கடந்த 9ம் திகதி அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து 45 தஞ்சக்கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் இலங்கையிலிருந்து படகு வழியாக அவுஸ்திரேலியாவுக்கு வர முயன்று கிறிஸ்துமஸ் தீவு அருகே இடைமறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம், இப்படகு எப்போது அவுஸ்திரேலியா கடல் பகுதிக்குள் நுழைந்தது என்பது தெரியவில்லை.
ஆனால், இவர்களின் படகு இடைமறிக்கப்பட்ட பின்னர் அவுஸ்திரேலியாவின் எல்லைகள் இறைமை நடவடிக்கையின் படகில் தஞ்சக்கோரிக்கையாளர்கள் வைக்கப்பட்டிருந்தனர் எனக் கூறப்படுகிறது.
அதே போல், அவுஸ்திரேலிய கடல் பகுதிக்குள் 15 தஞ்சக்கோரிக்கையாளர்களுடன் வந்த மற்றொரு படகும் அவுஸ்திரேலிய எல்லைப்படையால் தடுத்து நிறுத்தப்பட்டு, அதிலிருந்தவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், அவுஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் மொத்தம் இரண்டு படகுகள் இடைமறிக்கப்பட்டு, இலங்கை அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
நாடு கடத்தப்பட்ட அனைவரும் இலங்கையின் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
படகு வழியாக வருபவர்களை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டிலேயே புதிதாக ஆட்சி வந்துள்ள அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் இருந்து வருகிறது.
இந்த கொள்கையின் அடிப்படையிலேயே அவுஸ்திரேலியாவில் தஞ்சமடையும் இலங்கை அகதிகள் தொடர்ந்து நாடுகடத்தப்பட்டு வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்த 15 இலங்கைய
அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் மிக சக்தி வாய்ந்த ரேடியோ டெல
அவுஸ்திரேலியாவில், 40வயதான இலங்கையர் ஒருவர் தமது உயிரை
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள
தமிழர்களிற்கு எதிரான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை
அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி,
முன்னாள் பிரதமரின் மகன் மற்றும் அவரது குடும்பத்தினர்
ஆஸ்திரேலியா - மெல்பேர்னில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இள
தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அவுஸ்திரேலி
உலகப்பரப்பில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே
அவுஸ்திரேலியாவில் இரண்டு குழந்தைகளை கொன்று இலங்கையர
அவுஸ்திரேலியாவில் 35 தமிழ் இளைஞர் ஒருவர் இன்று காலை உயி
அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கட் வீரர் எண்ட்ரூ ஸிமண்ட
யுவதிகளின் ஆபாசமான படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்பு