திருகோணமலை

  • All News
  • சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான இரு பொருட்களுடன் ஒருவர் சிக்கினார்
சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான இரு பொருட்களுடன் ஒருவர் சிக்கினார்
Feb 08
சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான இரு பொருட்களுடன் ஒருவர் சிக்கினார்

சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட இரண்டு வலம்புரிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக வைத்திருந்த நபர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.



மூதூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நெய்தல் நகர் பகுதியில் நேற்று (06) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது வாழைச்சேனை, களவாஞ்சிக்குடி முகாமில் இருந்து விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, வலம்புரிகளை விற்பனை செய்வதற்கு தயாரான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.



சந்தேகநபர் மூதூர் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரெனவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக அவர் மூதூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



 






Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 20 (14:37 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 20 (14:37 pm )
Testing centres