கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விபத்து ஏற்பட்ட போது நிறுத்தப்பட்ட, இப்படத்தின் படப்பிடிப்பு அதன்பின் தொடங்கப்படவில்லை. மேலும் தயாரிப்பு தரப்புடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியன் 2 படத்தை கிடப்பில் போட்ட இயக்குனர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்க தயாராகி வந்தார்.
இதனிடையே, இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு படத்தை ஷங்கர் இயக்க தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் மேல்முறையீடு செய்திருந்தது. இதனை விசாரித்த தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்த நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த விவகாரம் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்த கமல்ஹாசன், சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “‘இந்தியன் 2’ படத்தின் 60 சதவீத காட்சிகள் முடிவடைந்துள்ளது. இப்படத்தை சுற்றியுள்ள பிரச்சனைகள் கூடிய விரைவில் முடிக்கப்பட்டுவிடும். விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ‘இந்தியன் 2’ பட பணிகள் ஆரம்பிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்
தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா
தமிழில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘பம்மல் க
பிரபலங்கள் மீடியாவில் ஒரு வார்த்தை தவறாக பேசினாலே அது
நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து தனக
கடந்த பிப்ரவரி 4ம் தேதி மக்களின் பெரிய எதிர்ப்பார்ப்ப
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்க
இந்த நாவலை பற்றி நாங்கள் சொல்ல
தமிழில் கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, அங்கா
தமிழில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘நான் ஈ’, விஜய
விஜய்யின் பீஸ்ட் படம் ரிலீஸ் ஆன நேரத்தில் அதை யோகி பாப
விஜய் தொலைக்காட்சியில் குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்ப
வலிமை ஒட்டு மொத்த இந்திய சினிமாவும் ஆவலுடன் காத்திருந
ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை
பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் வைல்கார்டு என்ட்ரியாக வரப
