நாடுமுழுவதும் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்பு இந்தியாவில் மிகப்பெரிய கண்ணிவெடி தாக்குதலை நடத்துவதற்கு பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டு உள்ளது.
இதற்காக பயங்கரவாதிகளுக்கு ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் பயிற்சி கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு அதிநவீன கண்ணி வெடிகளை பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிற்குள் அனுப்பி இருப்பதை உளவுத்துறை கண்டுப்பிடித்து உள்ளது. அந்த கண்ணிவெடிகள் ஒவ்வொன்றும் சுமார் 3 கிலோ எடை கொண்டவை.
இந்த கண்ணி வெடி தாக்குதலை குறிப்பிட்ட இடங்களில் நடத்துவதற்கு 6 நக்சலைட் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. முகமது சித்திக் என்ற பயங்கரவாதி தலைமையில் அந்த பயங்கரவாதிகள் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் முகாமிட்டு இருக்கிறார்கள்.
அதுபோல ஜெய்ஸ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் எல்லையில் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதை உளவுத்துறையினர் கண்டறிந்து உள்ளனர். இந்த பயங்கரவாதிகள் மூலம் இந்தியாவில் நாச வேலைக்கு முயற்சிகள் நடப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே முக்கிய நகரங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உளவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

உத்தரகாண்டின் சுகாதார மந்திரி தன்சிங் ராவத் செய்தியா
வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் வருகின்ற வெள்ளிக்கி
அசாம் சட்டசபைக்கு 3 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு நடந்
வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (வயது 74). 3 ம
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் வாங்கம் பகுதி
தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்காக
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்
கொரோனா இரண்டாம் அலையின் கோரதாண்டவத்தை நாட்டு மக்கள் ய
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து நாள
தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்த
கர்நாடக பா.ஜனதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள
மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்த, காங்கிரசை உள்ளடக்கிய
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, ஸ்டார் ஓட்டல்கள், ரி
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலையொட்டி, வாக்குச்சாவட
