More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ஈரோட்டில் நேற்று 10 ஆயிரம் பேருக்கு கோவேக்சின் 2-வது டோஸ் தடுப்பூசி!
ஈரோட்டில் நேற்று 10 ஆயிரம் பேருக்கு கோவேக்சின் 2-வது டோஸ் தடுப்பூசி!
Aug 11
ஈரோட்டில் நேற்று 10 ஆயிரம் பேருக்கு கோவேக்சின் 2-வது டோஸ் தடுப்பூசி!

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 76 இடங்களில் 10 ஆயிரத்து 50 பேருக்கு கோவேக்சின் 2ஆம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது



ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்போது, கொரோனா தொற்று மீண்டும் படிப்படியாக உயர துவங்கி இருப்பதால், கொரோனா தடுப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி உள்ளது. அதேசமயம் மக்களை தொற்றில் இருந்து பாதுகாக்க கொரோனா தடுப்பூசி போடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. முதலில் மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.



தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடப்படும் மையங்களுக்கு முன்பு இரவிலேயே மக்கள் குவியத் தொடங்கி விடுகின்றனர். இதன் காரணமாக டோக்கன் அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. பின்னர், கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் தடுப்பூசி போடப்பட்ட வந்தது. இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு வாக்குச்சாவடி அடிப்படையில் அந்தந்த தேர்தல் நிலைய அலுவலர்கள் மூலம் வீடுகளில் டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் நேற்று சிவகிரி, மொடக்குறிச்சி, சென்னிமலை, தாளவாடி, சித்தோடு, திங்களூர், நம்பியூர், டி.என்.பாளையம் புளியம்பட்டி, அத்தாணி, மொடக்குறிச்சி, அந்தியூர், கோபி உள்ளிட்ட பகுதிகளிலும், ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 10 இடங்கள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 76 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 ஆயிரத்து 50 பேருக்கு கோவேக்சின் 2-ம் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. டோக்கன் அடிப்படையில் 50 முதல் 300 பேர் வரை ஒவ்வொரு வாக்குச் சாவடி மையத்திலும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun16

கொரோனா தொற்றினால் பெற்றோர் 2 பேரையோ அல்லது அவர்களில் ஒ

Mar06

இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கான சாத்திய

Jan07

பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நேற்

May06

கொரோனா வைரசின் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரு

Feb10

இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல

Mar11

கேரள மாநிலம் பெரும்பாபூர் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி.

May03

தமிழக சட்டசபை தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.

Sep04
May09

சிறைச்சாலைகளில் கொரோனா பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு பரோ

Jun14

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான திரவ மருத்து

Aug19
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (10:31 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (10:31 am )
Testing centres