கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதையடுத்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், குறுகிய காலத்தில் நானி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார்.
சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷ்மிகா, தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். அங்கு அமிதாப் பச்சன், சித்தார்த் மல்ஹோத்ரா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவ்வாறு தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகாவுக்கு சமூக வலைதளங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், நடிகை ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில், அதிக பாலோவர்களை கொண்ட தென்னிந்திய நடிகையாக உயர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 20 மில்லியனை (2 கோடி) தாண்டியுள்ளது. இதன்மூலம் காஜல் அகர்வால், சமந்தா, ரகுல் பிரீத் சிங், ஸ்ருதிஹாசன் போன்ற நடிகைகளை பின்னுக்கு தள்ளியுள்ளார் ராஷ்மிகா.
இவருக்கு அடுத்ததாக, நடிகை காஜல் அகர்வாலை 1.92 கோடி ரசிகர்களும், சமந்தாவை 1.8 கோடி ரசிகர்களும், ரகுல் பிரீத் சிங்கை 1.73 கோடி ரசிகர்களும், ஸ்ருதிஹாசனை 1.72 கோடி ரசிகர்களும் பின் தொடர்கின்றனர்.

தமிழில் செம்பருத்தி படத்தில் அறிமுகமாகி 1990 மற்றும் 2000-க
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வ
சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, &l
மும்பை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் மலாடு மத் ஐலேண்ட
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தி
மலையாளத்தில் கடந்த 2016ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெ
நடிகர் ஆதி நான் சிரித்தால் படத்தைத் தொடர்ந்து அடுத்தத
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவ
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்(வயது61) செ
தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராகவும், நடிகராகவும
லைக்கா மற்றும் எஸ்.கே. நிறுவனம் இணைந்து தயாரித்து ரெட்
வெப் தொடர்களுக்கு சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் வரவ
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் செந்தில். இவர் க
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சினேகா திரும
