காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் டுவிட் பதிவில், “ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. டுவிட் கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.
அதுவரை, அவர் தனது மற்ற சமூக வலைத்தளங்களில் உங்கள் அனைவருடனும் தொடர்பில் இருப்பார். நமது மக்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி, அவர்களின் கோரிக்கைகளுக்காக போராடுவார். ஜெய் ஹிந்த்!” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தலைநகர் டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் ராகுல் காந்தி டுவிட் ஒன்று வெளியிட்டதாகக் கூறி அவரது பதிவு ஒன்றை நேற்று டுவிட்டர் நிறுவனம் நீக்கியிருந்தது. இந்த நிலையில், தற்போது ராகுல் காந்தியின் கணக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் ந
தமிழகத்தில்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 10.1 வீதம பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதை அட கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் கோவையில் பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை செ மைசூரு பல்கலைக்கழக 101-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்-அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை ப பேரறிவாளனுக்கு பிணை வழங்கியதற்கு நாம் தமிழர் கட்சியி
