More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • அனைத்து ஆசிரியர்களும் 2ந்தேதி முதல் பள்ளிக்கு வரவேண்டும்- கல்வித்துறை உத்தரவு
அனைத்து ஆசிரியர்களும் 2ந்தேதி முதல் பள்ளிக்கு வரவேண்டும்- கல்வித்துறை உத்தரவு
Jul 30
அனைத்து ஆசிரியர்களும் 2ந்தேதி முதல் பள்ளிக்கு வரவேண்டும்- கல்வித்துறை உத்தரவு

பள்ளிக்கல்வி ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது



அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக, தலைமை ஆசிரியர்களுக்கு உதவி செய்ய ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வருகை தந்து பணிபுரிய ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.



தற்போது மாணவர் சேர்க்கை பணி, பள்ளி கால அட்டவணை தயாரித்தல், விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான நலத்திட்டங்கள் வழங்குதல், பள்ளி வகுப்பறை, பள்ளி வளாகங்களை தூய்மை செய்தல், மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்ற பாட விவரங்களுக்கு ஏற்ப ‘அசைன்மெண்ட்' வழங்கி அவற்றை மதிப்பீடு செய்தல் மற்றும் மதிப்பீடு செய்த விவரங்களை பதிவேடுகளில் பதிவு செய்து பராமரித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.





இதனை கருத்தில் கொண்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகிற 2-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் நாள்தோறும் பள்ளிக்கு வருகை புரிந்து பணிபுரிவதற்கு தேவையான அறிவுரைகளை உடனடியாக வழங்க வேண்டும்.



மாற்றுத்திறனாளிகள், புற்றுநோய் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், இருதயநோய் அறுவை சிகிச்சை மேற்கொண்டு உள்ளவர்கள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் ஆசிரியர்கள் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு உரிய ஆவணங்களை அளிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே அந்த ஆசிரியர் பள்ளிக்கு தினமும் வருகை பெறுவதிலிருந்து விலக்கு அளித்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.



இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்து வருவதாக ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஆசிரியர்கள் அனைவரும் வருகை தர வேண்டும் என்ற அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul02

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுக

Jul07

ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த

Feb13

தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த காவலர்

Mar20

இந்தியாவில் மகன், மருமகள் மற்றும் இரண்டு பேத்திகளை வீ

Jul15

புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் அனைத்து உள்நாட்

Jul30

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்

Jul26

கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக பாஜ.வில் உட

Jan20

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை இன்ற

Mar03

டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிடுவேன் என்று

Sep20

சட்டம் தாண்டி சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண்

Oct10

இந்தியாவிலேயே முதன் முதலில் 146 ஆண்டுகளுக்கு முன்னர் தூ

Aug05

ரெயில்களில் பயணிகளுக்கு இணையதள வசதியை வழங்குவதற்காக

Mar15

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 20 சீட்டுகளை

Aug18

கேரளாவில்  கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இன்னும் கட்

Feb25

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 23-ந்தேதி கலைவ

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (10:21 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (10:21 am )
Testing centres