ரோஜாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பலரும் புகார் வாசித்ததால் அவர் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ஆந்திராவில், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரோஜா. நகரி தொகுதியில் போட்டியிட்டு வென்ற ரோஜாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படுகிறது என்ற பேச்சு நிலவியது. ஆனால் அந்த வாய்ப்பு அமையவில்லை என்றதும், ரோஜாவுக்கு முக்கிய பதவி வழங்கவேண்டும் என்ற பேச்சு எழுந்தது.
இதையடுத்து, தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவர் பதவி ரோஜாவுக்கு வழங்கப்பட்டது. தற்போது அந்த பதவியில் இருந்து ரோஜா நீக்கப்பட்டு புதிய தலைவராக மேட்டு கோவிந்த ரெட்டி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
ரோஜா மீது குவிந்த புகார்கள்தான் இதற்கு காரணம் என்கிறது கட்சி தலைமை. புத்தூர், நகரி நகராட்சி தேர்தல்களில் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து பலர் களம் இறங்கியிருக்கிறார்கள். ரோஜாவின் நடவடிக்கைகளினால்தான் வேட்பாளருக்கு எதிராக பலர் இறங்கியிருக்கிறார்கள் என்று புகார்கள் குவிந்ததால், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ரோஜா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தேர்தல் ஆணையம் ப
பிரதமர் நரேந்திர மோடி தனது 2 நாள் வங்கதேச பயணத்தை முடித
புதுச்சேரி அரசு கவிழ்வதற்கு ஜெகத்ரட்சகன் காரணம் என கு
கட்சி தொடங்கலாமா? என்று கடந்த இரண்டு வருடங்களுக்கு மு
அரசியல், மத கூட்டங்களை நிறுத்தவில்லை என்றால் கொரோனா வ
மேற்கு வங்காள கவர்னராக ஜெக்தீப் தாங்கர் கடந்த 2019-ம் ஆண்
உத்திர பிரதேச முதல்வராக 2-வது முறையாக பதவியேற்றுள்ள பா
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று நிரு
தமிழக காவல்துறையினருக்கு ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்கப்ப
மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலு
திமுக தலைவராக தேர்வான மு.க.ஸ்டாலினுக்கு திமுக நிர்வாக
சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவ
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி தலைமைக்கு எதிர
தமிழக அரசு பணியில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் கடந
