தேனியில் நோயாளிகளை தனது ஆட்டோவில் இலவமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேவை புரிந்து வரும் ஆட்டோ ஓட்டுநருக்கு, மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
தேனி மாவட்டம் பி.சி.பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக். இவர் கொரோனா இரண்டாவது அலையின்போது, தனது ஆட்டோவில் நோயாளிகளை கட்டணமின்றி இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சேவை புரிந்து வந்தார். இவரது தன்னலமற்ற இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், பி.சி.பட்டியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட நேற்று முன்தினம் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
வழியில் நின்றிருந்த கார்த்திக்கின் ஆட்டோவில் மருத்துவத்திற்கு இலவசம் என்ற வாசகம் எழுதப்பட்டிருந்ததை பார்த்த ஆட்சியர் முரளிதரன் உடனடியாக காரை நிறுத்தி கீழே இறங்கினார். தொடர்ந்து, ஆட்டோவில் நின்றிருந்த கார்த்திக்கிடம் சென்ற ஆட்சியர், அவரது சேவையை கவுரவிக்கும் விதமாக சால்வை அணிவித்து பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் இந்த செயல் பி.சி.பட்டி கிராம மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திமுக அரசு அனைத்து துறைகளிலும்
சீனாவில் 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொட
சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன் பகுதியில் தமிழர
வாக்களிக்காதவர்கள் வெட்கப்படும் அளவுக்கு நன்மை செய்
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கத்த
இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுக
நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப
மும்பையில் இளம்பெண் கொலை வழக்கில் மகனை தந்தையே காட
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறத
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நீடித்துவரும் நிலையில் ,
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24-ந
மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த லட்சுமி நகர் பகுத
