இந்தியில் சமந்தா, பிரியாமணி, மனோஜ் பாஜ்பாய் ஆகியோர் நடித்து ஓ.டி.டி தளத்தில் வெளியான ‘தி பேமிலிமேன் 2’ வெப்தொடர் சர்ச்சையை கிளப்பியது. அதில் சமந்தா ஏற்று நடித்த போராளி கதாபாத்திரத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் தொடரை தடை செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது.
விரைவில் இந்த தொடரின் மூன்றாம் பாகம் தயாராக உள்ளது. இதில் நடிகர் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவின. சர்ச்சை தொடரில் நடிக்க விஜய் சேதுபதி எப்படி சம்மதித்தார் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு நடிகர் விஜய்சேதுபதி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறும்போது, “நான் ஷாகித் கபூருடன் இணைந்து புதிய வெப் தொடரில் நடிக்கிறேன். மனோஜ் பாஜ்பாயுடன் சேர்ந்து எந்த தொடரிலும் நடிக்கவில்லை. ஆனாலும் அவருடன் நடிக்க ஆர்வம் உள்ளது’’ என்றார். இதன்மூலம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஜய் சேதுபதி.
அவர் நடித்துள்ள லாபம், கடைசி விவசாயி போன்ற படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு பெருவாரியான ரசிகர்கள
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரனமாக நிறு
மாநாடு திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு த
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி
கதாநாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு பாலி
நடிகர் சுந்தர்ராஜனின் மகனான தீபக் சுந்தர்ராஜன் இயக்க
மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடி
பிக்பாஸ் 5வது சீசனில் புதுமுக பிரபலங்களுக்கு நடுவில்
எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் திரையு
சூரியா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப்படத்தி
தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்த அரவிந்த் சாமி, தற்ப
1980களில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் பூர்ணிமா பாக்யராஜ்
பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக
கொரோனா பாதிப்பின் காரணமாக நகைச்சுவை நடிகர் பாண்டு மற்
