ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணையவிருக்கிறார். இதையடுத்து, யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதற்கு ஏற்ப அவரது பிரச்சார வாகனத்தில் கருணாநிதி,ஸ்டாலின், உதயநிதி படங்கள் இடம்பெற்றுள்ளன.
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், தேர்தல் நேரத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தோப்பு வெங்கடாசலம் இன்று திமுகவில் இணையவிருப்பதாக தகவல்
பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்றிருந்த தோப்பு வெங்கடாசலத்திற்கு நடந்த தேர்தலில் சீட் கொடுக்காததால், அவர் சுயேட்சையாக போட்டியிட்டார். இதனால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். சுயேட்சையாக போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம் 9 ஆயிரத்து 791 வாக்குகளை மட்டுமே பெற்றார். அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார்தான் வெற்றி பெற்றார்.
தோல்விக்கு பின்னர், அவர் செந்தில்பாலாஜி மூலமாக திமுகவில் சேர முயன்று வருவதாகவும், அதுவும் இன்றைக்கு அவர் திமுகவில் இணைய அதிகம் வாய்ப்பிருக்கிறது என்றும் தகவல்.
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதற்கு ஏற்ப, அவர் திமுகவில் இணைவதற்கு முன்பே, அவரது பிரச்சார வாகனத்தில் கருணாநிதி,ஸ்டாலின், உதயநிதி படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பிரச்சார வாகன படம் இணையங்களில் வைரலாகி வருகின்றன. இதையடுத்து, ’திமுக புகழ் பாட புறப்பட்டுவிட்டார் மாஜி அதிமுக அமைச்சர்’ என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.


தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிர
பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கா
சேலத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஏற்பட்ட இடிபாட
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா
பிரதமர் மோடி நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள எய
பெருந்தோட்ட சமூகத்துக்கு முகவரிகளை பதிவு செய்யுமாறு
பாமக நிறுவனர் ராமதாசின் 83-ஆவது பிறந்தநாள் இன்று . இதை மு
இராமேஸ்வரத்தை சேர்ந்த கடற்றொழிலாளர் முனியராஜ் என்
உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த தமிழகத்தின் கோயம்புத்தூ
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் இன்று
தமிழக சட்டசபை பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை கூட
நாம் தமிழர் முன்வைக்கும் மாற்றம் என்பது அதிமுகவை அகற்
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
