யாருடனும் பழகவில்லை என்று மனைவி எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காமல் அவரை கடப்பாறையால் அடித்து கொலை செய்ததோடு மாமியாரையும் அடித்து கொலை செய்துள்ளார் முருகன். கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர் பேட்டை அடுத்த கட்சிக்குச்சான் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தினமும் மது அருந்து முருகன், மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நாளடைவில் அவர் மீது சந்தேகப்பட்டு பிரச்சனை செய்து வந்துள்ளார். யாருடனும் எந்த பழக்கமும் இல்லைஎன்று மனைவி எவ்வளவோ எடுத்து சொல்லியும் கூட முருகன் கேட்கவில்லை.
நாளுக்கு நாள் பிரச்சனை அதிகமானதால் முருகனின் மனைவி மகாலட்சுமி கோபித்துக்கொண்டு அவர் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
உடனே முருக்கம்பட்டி சென்று மகாலட்சுமியை அழைத்திருக்கிறார். குடிபோதையில் இருந்த முருகனிடம் எந்தபதிலும் சொல்லவில்லை மகாலட்சுமி. இதனால், மாமியாரிடம் ஒன்று என் மகாலட்சுமியை என் வீட்டுக்கு அனுப்பிவை, இல்லை என்றால் நான் வாங்கிக்கிப்போட்ட நகைகளை திரும்ப கொடுத்துவிடு என்று சொல்லி இருக்கிறார்.
இதனால் மாமியார் அவரை சமாதானப்படுத்தி சாப்பாடு போட்டு தூங்கச்சொல்லி இருக்கிறார்.
சாப்பிட்டுவிட்டு தூங்கிய முருகன், நள்ளிரவில் எழுந்து கடப்பாரையை எடுத்து மகாலட்சுமியையும் , அவரது தாயாரையும் அடித்து கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
முருகனை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை இன்ற
உத்தரப்பிரதேசத்தில் மனைவியை நண்பனுக்கு பாலியல் வி
கேரளாவில் மழை வெ
திமுகவின் பெரும்புள்ளியான எ.வ. வேலுவின் வீடுகள், அறக்க
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில்,
கடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 51-வது வார்டில்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் இலங்க
ஜம்மு காஷ்மீரின் சோபோர் பகுதியில் போலீசாரும், பாதுகாப
இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூச
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலைய
ராஜஸ்தானின் கங்காநகர் மாவட்டத்தில் நேற்று பகலில் ராண
அழகிரியும், பாஜக வில் இணைகின்ற நாளை உருவாக்குவோம் என்
டெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த
கடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்து
