யாருடனும் பழகவில்லை என்று மனைவி எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காமல் அவரை கடப்பாறையால் அடித்து கொலை செய்ததோடு மாமியாரையும் அடித்து கொலை செய்துள்ளார் முருகன். கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர் பேட்டை அடுத்த கட்சிக்குச்சான் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தினமும் மது அருந்து முருகன், மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நாளடைவில் அவர் மீது சந்தேகப்பட்டு பிரச்சனை செய்து வந்துள்ளார். யாருடனும் எந்த பழக்கமும் இல்லைஎன்று மனைவி எவ்வளவோ எடுத்து சொல்லியும் கூட முருகன் கேட்கவில்லை.
நாளுக்கு நாள் பிரச்சனை அதிகமானதால் முருகனின் மனைவி மகாலட்சுமி கோபித்துக்கொண்டு அவர் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
உடனே முருக்கம்பட்டி சென்று மகாலட்சுமியை அழைத்திருக்கிறார். குடிபோதையில் இருந்த முருகனிடம் எந்தபதிலும் சொல்லவில்லை மகாலட்சுமி. இதனால், மாமியாரிடம் ஒன்று என் மகாலட்சுமியை என் வீட்டுக்கு அனுப்பிவை, இல்லை என்றால் நான் வாங்கிக்கிப்போட்ட நகைகளை திரும்ப கொடுத்துவிடு என்று சொல்லி இருக்கிறார்.
இதனால் மாமியார் அவரை சமாதானப்படுத்தி சாப்பாடு போட்டு தூங்கச்சொல்லி இருக்கிறார்.
சாப்பிட்டுவிட்டு தூங்கிய முருகன், நள்ளிரவில் எழுந்து கடப்பாரையை எடுத்து மகாலட்சுமியையும் , அவரது தாயாரையும் அடித்து கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
முருகனை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.

ர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதி
துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி இன்று தொடங்கியது. அடு
டிஜிபி மற்றும் எஸ்பி மீதான பாலியல் புகார் வழக்கை, விழு
சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள
மத்திய அரசின் மிக முக்கியமான சுகாதார திட்டமான, ஆயுஷ்ம
மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால
சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங் கோழிப் பண்ணை தீவனத்தில் முக்கிய மூலப்பொருளாக விளங்கு இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண தீனதயாள் சேவை மையம், உலக கலை விளையாட்டு கூட்டமைப்பு, மத தமிழகத்தில் சமீபகாலமாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 20 சீட்டுகளை இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த காவலர்
