யாழ். மாவட்டத்தில் கடந்த மே மாத இறுதியிலும் ஜூன் மாத ஆரம்பத்திலும் கொரோனா நோய்க்கு எதிரான சினோபார்ம் முதலாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்றன.
இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் கடந்த ஜூன் 28 ஆம் திகதி முதல் யாழ். மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன.
இதன்படி கடந்த 28 ஆம் திகதி 10,110 பேருக்கும் 29 ஆம் திகதி 13,182 பேருக்கும் 29 ஆம் திகதி 10,090 பேருக்கும் ஆக மொத்தம் 33,382 பேருக்கு யாழ். மாவட்டத்தில் 2 வது தடுப்பூசி போட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து ஜூலை 01 ஆம் 02 ஆம் திகதிகளிலும் சுகாதார வைத்திய அதிகாரிகளால் ஒழுங்கு செய்யப்பட்ட நிலையங்களில் தடுப்பூசி வழங்கும் பணிகள் இடம்பெறும். இந்த 5 நாட்களிலும் 2 வது தடுப்பூசியினை பெற தவறியவர்களுக்கு எதிர்வரும் ஜூலை 03 ஆம் திகதி சனிக்கிழமை அந்தந்த பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் காலை 8 மணி முதல் தடுப்பூசி வழங்கப்படும்.
தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசி யாழ். போதனா வைத்திய சாலையிலும் தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி, ஊர்காவற்துறை ஆதார வைத்திய சாலைகளிலும் வழங்கப்பட்டிருந்தது.
இவர்களுக்கான 2 வது தடுப்பூசி ஜூலை 03 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் இதே வைத்தியசாலைகளில் வழங்கப்படும். எனவே தவறாது குறிக்கப்பட்ட இந்த தினத்தில் சமூகமளித்து உங்களுக்கான 2 வது தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறு வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டித்தன்மை
ஹட்டன் – டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் உயிருடன்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) உறுப்பினர் சஜின் வா
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட
தைத்த ஆடைகளின் விலைகள் சுமார் 40 வீதத்தினால் உயர்வடைந்
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக நின்
இலங்கை மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 273 பேர் கடந்த 24 ம
இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழ
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதிக் கோரிக்கை கடித
கொவிட் பரவல் தற்போது கட்டுப்படுத்தப்படாவிட்டால் நாட
வெடிபொருட்கள் செயலிழப்பு உள்ளிட்ட காவல்துறை கடமைகளு
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிர
அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை விசேட ப
வவுனியா கணேசபுரம் காட்டுப் பகுதியிலிருந்து
