அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக 3-வது அணி அமைப்பது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறுகையில், "காங்கிரஸ் இன்றி பாஜகவுக்கு எதிரான அணியை அமைக்க முடியாது. இதற்கான சாத்திய கூறுகள் இல்லை" என்றார்.
மேலும் மராட்டியத்தில் வரும் தேர்தல்களில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று நானா படோலே கூறி வருகிறார். இந்த சமயத்தில் தேர்தல் பற்றி பேசினால் மக்கள் நம்மை செருப்பால் அடிப்பார்கள் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பகிரங்கமாக நானா படோலேயை எச்சரித்தார். அதே வேளையில் நீங்கள் தனித்து போட்டியிட்டால், நாங்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பதிலடி கொடுத்தார். .
இதற்கு பதிலளித்த நானா படோலே, வரும் தேர்தல்களில் சிவசேனா, காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் அதற்காக எனது வாழ்த்துக்கள் என்று பதிலளித்தார்.
மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு திடீரெ
கே.எஃப்.ஜே ஜுவல்லரியின் நகை சேமிப்பு திட்டத்தில் சே
மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதி
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை மத்த
தமிழகத்தில் சாலைப் பணிகளை மேற்கொள்ள 1.03 இலட்சம் கோடி ரூ
முழு ஊரடங்கு காரணமாக ஆட்டோ, கார் உள்பட அனைத்து போக்குவ
உலகையே புரட்டி போட்ட கொரோனா வைரசை மருத்துவத்துறையினர
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24-ந
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று நிரு
கொரோனா நேரத்தில் உயிர்காக்கப் போராடும் முன்களப் பணிய
தமிழக தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை நெருங்கிவருகி
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரா
’’ஓ.பன்னீர்செல்வம் யாருக்கும் உண்மையாக இல்லை - திமு
தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சி
