முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் சிவசேனா ஆண்டு விழாவையொட்டி உரையாற்றினாா். அப்போது அவர் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல், தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து பேசினால் மக்கள் நம்மை செருப்பால் அடிப்பார்கள் என ஆவேசமாக பேசினார். சமீப காலமாக வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவோம் என கூறிவரும் காங்கிரஸ் கட்சியினரை முதல்-மந்திரி சாடியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இதுகுறித்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் நானா படோலே கூறுகையில், "உத்தவ் தாக்கரே எந்த கட்சியை குறிப்பிட்டு பேசுகிறார் என்பதில் தெளிவு இல்லை. பாஜகவும் தனித்து போட்டியிட போகிறோம் என்று தான் கூறிவருகின்றனர். இதற்கு முன் உள்ளாட்சி, சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய 4 கட்சிகளும் தனித்து போட்டியிட்டு உள்ளன.
பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்காக கடந்த 2019-ல் 5 ஆண்டுகளுக்கு மகாவிகாஸ் கூட்டணியை உருவாக்கினோம். அது நிரந்தரமானது இல்லை. எல்லா கட்சிக்கும், அவர்களது கட்சியை பலப்படுத்த உரிமை உள்ளது.
மேலும் காங்கிரஸ் எப்போதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரத்தம், ஆக்சிஜன், பிளாஸ்மா வழங்குவதில் முன்னுரிமை அளித்து வருகிறது’’ என்றார்.
ஈரோட்டில் காதல் தோல்வியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலு
பூர்வீகச் சொத்துகளை விற்று பாகம் பிரித்துத் தராமல், ம
தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூ
மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் மகாராஷ்டிரா நவநிர்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்க
சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை ப
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கட
தமிழகத்தில் திருநங்கையாக மாறிய மகனுக்கு அனைவர் முன்ன
குமரி மாவட்டம் நாகர்கோவில், கோட்டார் செட்டித்தெருவில
ராமேஸ்வரத்திற்கு நேற்று முன்தினம் மாலை வந்த சசிகலா தன
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிர
கல் குவாரிகளில் அனுமதி வழங்குவதில் உள்ள முறைகே
பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் விலை
சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன
