ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தொகுதி மறு வரையறை பணிகள் முடிந்த பிறகு ஜம்மு காஷ்மீரில் தேர்தலுக்கான நடைமுறை துவங்கும் என கூறி உள்ளார்.
ஆனால், காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து மற்றும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும், சட்டப்பேரவை தேர்தல் இப்போது வேண்டாம் என பெரும்பாலான ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் கூறி உள்ளனர்.
இதே கருத்தை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரமும் கூறி உள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு முதலில் மாநில அந்தஸ்து வழங்கி அதன் பிறகு தேர்தல் நடத்த வேண்டும் என அவர் கூறியிருக்கிறார்.
ஜம்மு காஷ்மீருக்கு முதலில் மாநில அந்தஸ்து வழங்குவதையே காங்கிரஸ் மற்றும் ஜம்மு காஷ்மீரின் பிற கட்சிகள் மற்றும் தலைவர்கள் விரும்புகிறார்கள். அதன்பின்னர் தேர்தல்களை விரும்புகிறார்கள். ஆனால், முதலில் தேர்தல், அதன்பிறகே மாநில அந்தஸ்து என்பதே அரசில் பதிலாக உள்ளது.
குகுதிரைதான் வண்டியை இழுக்க வேண்டுமே தவிர, வண்டியால் குதிரையை இழுக்க முடியாது. அதேபோல், ஒரு மாநிலம் தேர்தலை நடத்த வேண்டும். அத்தகைய தேர்தல்கள் மட்டுமே சுதந்திரமாகவும் நியாயமானதாகவும் இருக்கும். அரசாங்கம் ஏன் முன்னால் வண்டியையும் பின்னால் குதிரையையும் கட்டி இழுக்க விரும்புகிறது? இது வினோதமானது’ என ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
உத்தரகாண்டின் சுகாதார மந்திரி தன்சிங் ராவத் செய்தியா
ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டம் தங்பாவா பகு
உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து உயிரிழந்
சென்னை புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் மின்சார ரெயில்கள
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவுதினம்
மூன்று நாட்கள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள உள்துற
ஆலங்குடி அருகே சித்தப்பாவால் பாலியல் வன்கொடுமைக்கு உ
சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பா
பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ந் தேதி சமூக நீதி நாள
குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று உலகளாவிய படிதார் வணிக
தமிழகத்தில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பரவலைக் கட்டு
மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள ரசபுத்திரபாளையம் ப
கடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 51-வது வார்டில்
தமிழக சட்டசபை தேர்தலில்
பீகார் அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை
