More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கனடா செல்ல தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை தமிழர்களிடம் விசாரணை!
கனடா செல்ல தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை தமிழர்களிடம் விசாரணை!
Jun 20
கனடா செல்ல தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை தமிழர்களிடம் விசாரணை!

இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் கனடா செல்ல தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை தமிழர்கள் மங்களுர்வில் வைத்து கைது செய்யப்பட்டனர். அவர்களில் நால்ரை மங்களூர் தனிப்படை காவல்துறையினர் வேதாளை கடற்கரைக்கு அழைத்து வந்து இன்று விசாரணை செய்தனர். மேலும் தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை தமிழர்களுக்கு தங்க அடைக்கலம் கொடுத்த முக்கிய குற்றவாளி தலைமறைவானதால் அவர் குறித்தும் மங்களூர் தனிப்படை காவல்துறையினர் மரைக்காயர்பட்டிணத்தில் தீவிர விசாரணை நடத்தி சென்றனர்.



இலங்கை புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த 34 இலங்கை தமிழர்கள் சட்டவிரோதமாக கள்ளதோணியில் கனடா செல்வதற்காக கடந்த மாதம் 27ந் தேதி புத்தளம் கடற்கரையில் இருந்து புறப்பட்டனர். அவர்கள் மறுநாள் அதிகாலை ராமநாதபுரம் மாட்டம் ராமேஸ்வரம் அடுத்த வேதாளை கடற்கரையை வந்து சேர்ந்தனர். பின்னர் வேதாளையில் இருந்து மங்களூர் சென்று கடல் வழியாக கனடா நாட்டிற்கு தப்பி செல்ல முயன்ற போது கடந்த 11ந்தேதி மங்களூர் காவல்துறையினரால் 34 இலங்கை தமிழர்களும் கைது செய்யப்பட்டனர்.



இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 34 இலங்கை தமிழர்களில் நான்கு பேரை மட்டும் காவல்துறை காவலில் எடுத்த மங்களூர் காவல்துறையினர் அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்களை திரட்டுவதற்காக விசராணை நடத்தி வருகின்றனர்.



விசாரணையின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்ட 4 இலங்கை தமிழர்களை ராமேஸ்வரம் அடுத்துள்ள வேதளை கடற்கரைக்கு அழைத்து வந்த மங்களூரை சேர்ந்த ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், காவலர்கள் என 7 பேர் கொண்ட தனிப்படை இலங்கையிலிருந்து எப்படி கடற்கரையில் வந்து இறங்கினார்கள், அங்கிருந்து எப்படி மரைக்காயர்பட்டிணத்தில் உள்ள வீட்டில் தங்கி இருந்தனர் என்பது குறித்து அவர்களை வைத்து ஒத்திகை நடத்தி அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.



மேலும் சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை தமிழர்களை அடைக்கலம் கொடுத்து தங்க உதவிய முக்கிய குற்றவாளியான இம்ரான் கான் தலைமறைவாகியுள்ளதால் மரைக்காயர்பட்டிணத்தில் உள்ள அவரது வீட்டிற்கு தனிப்படை காவல்துறையினர் சென்றனர் அப்போது வீடு பூட்டி இருந்ததால் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர்.



விசாரணையில் இம்ரான் கான் ஒரு வாரத்திற்கு மேலாக மரைக்காயர்பட்டிணத்தில் இல்லை என்பது தெரியவந்ததையடுத்து அடுத்த கட்ட விசாரணை செய்வதற்காக தற்போது கைது செய்யப்பட்டு மங்களூரில் இருந்து அழைத்து வரப்பட்ட 4 இலங்கைத் தமிழர்களை கடற்கரை வழியாக எங்கெல்லாம் அவர்கள் சென்றார்கள் யாரெல்லாம் சந்தித்தார்கள் என் ராமநாதபுரம் கியூ பிரிவு காவல்துறையினரின் உதவியுடன் மங்களூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan12

இலங்கையில் உரப் பற்றாக்குறையால் விநியோகஸ்தர்கள் போர

Jul13

நாட்டில் இதுவரை 4,178,737 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத

Oct20

நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசிய

Mar01

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதி

Feb01

கண்டி, கட்டுகஸ்தோட்டையில் இளைஞர் ஒருவர் மிகவும் கொடூர

May21

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கா

Mar25

நாட்டில் இன்று ஒரு தெளிவான கொள்கையும் திட்டமும் செயற்

Sep20

நாட்டிற்கு இம்மாதம் முதல் 15 நாட்களில் வருகைத் தந்த சுற

Jul03

ராஜபக்சக்களுக்களுக்கு எதிரான எதிர்க்காற்று நாட்டில்

Sep19

திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) வ

Jun03

சில நாட்களுக்கு முன்பு, குஜராத் மாநிலம் ஹசிராவில் இரு

Jan26

கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை கட்டாயம

Jan18

இந்த வருடத்தின் முதலிரண்டு வாரங்களில் 39,172 சுற்றுலாப் ப

Apr03

இலங்கையில் இன்றைய தினம் பல்வேறு இடங்களில் அரசாங்கத்த

Oct13

ஹட்டன் – டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் உயிருடன்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 08 (04:41 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 08 (04:41 am )
Testing centres