டெல்லியில் உள்ள சந்தைகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதை தீவிரப்படுத்துவது குறித்து டெல்லி காவல் துறை ஆணையா் எஸ்.என். ஸ்ரீவாஸ்தவா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மாவட்டம், தானா அளவிலான பொது சுகாதார மேலாண்மைய குழுக்களை அமைத்து கொரோனா 3-வது அலையைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார். இந்தக் குழுவினா் பொது சுகாதார அவசர நிலை அறிவுறுத்தல்கள், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு செல்வது, முதியோருக்கான உதவி, ஏழைகளுக்கு ரேஷன் பொருள்கள் சென்றடைவது உள்ளிட்ட பல்வேறு வகையான விவகாரங்களுக்கு அறிவுரை வழங்குவார்கள். போலீசார் அபராதம் விதித்தாலும் மக்கள் 100 சதவீதம் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை.
ஆகையால், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றும் வகையில் இந்தக் குழுவினா் தேவையான முயற்சிகளை மேற்கொள்வார்கள் என்று டெல்லி காவல் துறை ஆணையா் ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண
நாடு முழுவதும் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாட
முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் (
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வ தமிழக காவல்துறையினருக்கு ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்கப்ப டெல்லி, அரியானா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மராட்டியம் தமிழகத்தில் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த மெகா தடுப ரோஜாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பலரும் புகார் வாசித தமிழகத்தில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பரவலைக் கட்டு
