பாகுபலி வெற்றிக்கு பிறகு அனைத்து மொழிகளிலும் சரித்திர புராண படங்கள் அதிகம் தயாராகின்றன. மலையாளத்தில் ‘அரபிக் கடலின்டே சிம்ஹம்’ எனும் சரித்திர படத்தில் மோகன்லால் நடித்துள்ளார். தெலுங்கில் ராமாயண கதை ‘ஆதிபுருஷ்’ என்ற பெயரில் படமாகிறது. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான் நடிக்கின்றனர். ரூ.500 கோடி செலவில் இப்படம் தயாராகிறது. தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் இந்த படத்தை டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.
இந்நிலையில், இந்தியிலும் ராமாயண கதை ‘சீதா’ என்ற பெயரில் படமாகிறது. சீதையின் பார்வையில் காட்சிகள் நகர்வது போன்று திரைக்கதை அமைத்துள்ளதால் இப்படத்திற்கு ‘சீதா’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் சீதையாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். கதை கேட்டதும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள அவர், அப்படத்தில் நடிக்க ரூ.12 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.
வழக்கமாக ஒரு படத்துக்கு 6 முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்கும் அவர், இப்படத்திற்காக சுமார் ஒரு வருடம் கால்ஷீட் தர வேண்டி இருப்பதால் ரூ.12 கோடி கேட்கிறாராம். படக்குழுவினர், அவர் கேட்ட தொகையை கொடுத்து ஒப்பந்தம் செய்வார்களா? அல்லது வேறு நடிகையை நடிக்க வைப்பார்களா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து
தமிழில் கார்த்தியுடன் காற்று வெளியிடை படத்தில் நடித்
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக தி
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'நானே வருவேன்' படத்தி
பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சமீபத்தில் வெ
பாரதி கண்ணம்மா விஜய் டிவியில் செம ஹிட்டாக ஓடும் ஒரு தொ
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல்
சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் சுமார் 6 வருடங்கள்,
மாமல்லபுரம் அருகே கடந்த மாதம் கார் விபத்தில் சிக்கிய
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஜ
நடிகர் மயில்சாமி புது மணத் தம்பதிகளுக்கு பெட்ரோலை அன்
ஒரு அறைக்குள் பூட்டி வைத்து நாயை அடிப்பது போல என்னை அட
பிக் பாஸ் அல்டிமேட் ஷோ தற்போது 26வது நாளை தொட்டு இருக்க
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி
