More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தென்மராட்சியில் பயணத்தடையினால் சீவல் தொழிலாளர்கள் பாதிப்பு!
தென்மராட்சியில் பயணத்தடையினால் சீவல் தொழிலாளர்கள் பாதிப்பு!
May 29
தென்மராட்சியில் பயணத்தடையினால் சீவல் தொழிலாளர்கள் பாதிப்பு!

இலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா  தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாடு தழுவியதாக நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கும் சமூக முடக்கல் கட்டுப்பாட்டினால் ஏற்பட்ட வருமான இழப்பையடுத்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சீவல் தொழிலாளர்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.



யாழ் மாவட்டத்தில்  தென்மராட்சி பிரதேசத்தில் சீவல் தொழிலை நம்பி வாழ்ந்து வருவோர் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.



தற்போதைய பயணக் கட்டுப்பாட்டின் மூலம் சீவல் தொழில் மூலம் தினமும் பெற்றுக் கொள்ளும் கள்ளினை விற்பனை செய்யவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில் நாளாந்தம் காலையிலும் மாலையிலும் மரத்தில் ஏறி பெறப்படுகின்ற கள்ளை வீணாக நிலத்தில் ஊற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.



இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,



அதை வேறு மாற்று உற்பத்தியும் எம்மால் மேற்கொள்ள முடியாத நிலையும் உள்ளது. நாளாந்தம் காலையும் மாலையும் சீவப்படும் கள்ளினை என்ன செய்வது என்றறியாதுள்ளது.



மீண்டும் மீண்டும் தொடர்ந்து அத் தொழிலை செய்ய வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது. அப்படி தொடர்ச்சியாக செய்யாவிடில் மீண்டும் அத்தொழிலை செய்யமுடியாத நிலை ஏற்படும். அத்தொடு தொடர்ந்து சீவல் செய்யாவிடில் அந்தமரம் முற்றாக அழிவடையும் நிலையும் வரும். அதன் காரணமாக காலையும் மாலையும் அதனுாடாகப் பெறப்படுகின்ற கள்ளினை கீழே ஊற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.



இவ்வாறு நாளாந்தம் பெறப்படுகின்ற கள்ளினை எமது சங்கத்தின் உடாக விற்பனை செய்து கிடைக்கின்ற பணத்தின் மூலம் பெறுகின்ற வருமானத்தைக் கொண்டு தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வந்ததாகவும் தற்போது அதற்கு ஒரு வழியும் இல்லாதுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.



இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமது குடும்பத்தின் நிலையை கருதி நமக்கு ஏதேனும் ஒரு நிவாரணத்தை பெற்று தரவேண்டும் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar04

இன்று (04) காலை 09 மணி முதல் நாளை (05) நண்பகல் 12 மணி வரை வெல்லம்

Oct07

வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை

Feb02

நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திலுள்ள இரு ஊழியர்கள் கொ

Sep26

அரச இரகசியச் சட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயங்களா

Sep20

இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடு

Oct22

நிலக்கரி தாங்கிய கப்பல் ஒன்று நாட்டிற்கு வருகை தரவுள்

Oct03

60 வயதில் வைத்தியர்கள் ஓய்வு பெறுவதால் சுகாதார சேவை வீழ

Aug16

இலங்கையில் இரவு நேரங்களில் களியாட்ட நிகழ்வுகளை நடத்த

Jan21

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முதல் மேல் மாகாணத

Sep28

ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளில்இ நிறை குறைந்த அதி

May28

யாழ்.போதனா வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சை பிரிவில் அ

Mar13

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 19ஆம் திகதி பங்களாதே

Oct25

2022ஆம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணத்தை இன்று (செவ்வாய்க்க

Oct05

இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்

May03

தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்திடமிருந்து ஒரு

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (18:46 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (18:46 pm )
Testing centres