More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • வீட்டு தனிமையில் இருக்கும் 2500 பேருக்கு 3 வேளை உணவு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
வீட்டு தனிமையில் இருக்கும் 2500 பேருக்கு 3 வேளை உணவு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
May 28
வீட்டு தனிமையில் இருக்கும் 2500 பேருக்கு 3 வேளை உணவு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

கொரோனா தொற்று லேசாக இருப்பவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்.



இந்த மாதிரி வீடுகளில் முடங்கி கிடப்பவர்கள் வெளியே சென்று பொருட்கள் எதுவும் வாங்க முடியாது.



மேலும் உடல் சோர்வு போன்ற காரணங்களால் வீடுகளில் சமையல் செய்து சாப்பிடவும் சிரமப்படுகிறார்கள்.



சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் மட்டும் இந்த மாதிரி தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் 2480 பேர் இருக்கிறார்கள்.



இவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கும் திட்டத்தை இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-



வீட்டு தனிமையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் பெயர் விபரம், முகவரி ஆகியவை சேகரிக்கப்பட்டுள்ளது.



இவர்களுக்கு வழங்க உணவு தயாரிப்பதற்காக தனியாக சமையல் கூடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



அங்கு தயாரிக்கப்படும் உணவை இந்த பணியில் ஈடுபடும் 100 களப்பணியாளர்கள் வீடு தேடி சென்று விநியோகிப்பார்கள்.



காலையில் இட்லி, பொங்கல், கிச்சடி, போன்றவை வழங்கப்படும். மதியம் சாப்பாடு, இரவு டிபன் என்று 3 வேளையும் இலவசமாக வழங்கப்படும்.



இந்த மனிதநேய உதவி கொரோனா கட்டுப்படும் வரை தொடர்ந்து நடைபெறும் தினமும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வீட்டுத்தனிமைக்கு பரிந்துரைக்கப்படுபவர்களின் பெயர் பட்டியலை பெற்று உணவு வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்படும்.



இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.



முதல் நாளான இன்று காலை சிற்றுண்டியாக இட்லி, பொங்கல், வடை, கேசரி வழங்கப்பட்டது. மதியம் சாப்பாடு வழங்கப்படுகிறது. 3 வேளையும் சைவ உணவே வழங்கப்படும்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun08

  சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல

Mar16

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு கடந்த 2021-2022-ம் ஆண்ட

May27

வங்க கடலின் கிழக்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத

Apr19

 நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்த

Sep05

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில்

Mar11

கேரள மாநிலம் பெரும்பாபூர் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி.

Sep18

பான் எண்ணை (நிரந்தர கணக்கு எண்) ஆதார் எண்ணுடன் இணைப்பதற

Oct01

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாள் இன்று க

Feb22

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்ப

Feb06

 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்க

Sep09

இயன்முறை மருத்துவர்களின் முயற்சிகளைப் போற்றுவோம் என

May13

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், ஊா்க்காட்டில் இரு பி

Jul27

இந்தியாவில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் பெரும் பாதிப்

Oct28

பிரதமர் மோடி, ஆட்சியின் தலைவராக தொடர்ந்து 20 ஆண்டுகள் ப

Mar08

உலகம் முழுவதையும் ஓராண்டுக்கும் மேலாக தனது கட்டுப்பா

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 31 (18:37 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 31 (18:37 pm )
Testing centres