More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • துறைமுக நகர விடயத்தில் தேசப்பற்றாளர்கள் என வீரவசனம் பேசியவர்களின் மௌனம் வேடிக்கையாகவுள்ளது – சாணக்கியன்
துறைமுக நகர விடயத்தில் தேசப்பற்றாளர்கள் என வீரவசனம் பேசியவர்களின் மௌனம் வேடிக்கையாகவுள்ளது – சாணக்கியன்
May 20
துறைமுக நகர விடயத்தில் தேசப்பற்றாளர்கள் என வீரவசனம் பேசியவர்களின் மௌனம் வேடிக்கையாகவுள்ளது – சாணக்கியன்

அரசாங்கத்தில் தேசப்பற்றாளர்கள் என குறிப்பிட்டுக் கொள்பவர்கள் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூல விவகாரத்தில் மௌனம் காப்பது வேடிக்கையாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.



கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



அவர் மேலும் குறிப்பிடுகையில்,



கொழும்பு துறைமுக நகரத்தின் நிர்வாகங்கள் ஒரு பிரத்தியேக ஆணைக்குழுவிற்கு வழங்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கவில்லை. நாட்டின் தேசிய பிரச்சினைகள் தலைதூக்கும் போது அதனை மூடிமறைத்து மக்களின் கவனத்தை திசைத்திருப்ப அரசாங்கம் ஏதாவதொரு நாடகத்தை அரங்கேற்றும்.



கொழும்பு துறைமுக நகரத்திற்குள் சர்வதேச பாடசாலை, சர்வதேச வைத்தியசாலை நிர்மாணிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. இந்த சர்வதேச பாடசாலை மற்றும் வைத்தியசாலைகளில் இலங்கையின் சாதாரண பிரஜைகளுக்கு அனுமதி வழங்கப்படாது. சீனர்களின் தேவைக்காகவே இவை உருவாகக்கப்படுகிறது.



கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் ஆளும் தரப்பின் ஒரு சிலர் தேசப்பற்றாளர்களை போல் வீரவசனம் பேசி இனங்களுக்கிடையில் தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவித்தார்கள்.



சிங்களே போன்ற அமைப்புக்களும் தேசிய கொடியில் தமிழ் முஸ்லிம் மக்களின் அடையாளங்கள் நீக்கப்பட வேண்டும் என்று தேவையற்ற கருத்துக்களை சமூகத்தின் மத்தியில் குறிப்பிட்டு வந்தார்கள். நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பல விடயங்கள் கொழும்பு துறைமுக நகர சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள நிலையில் தேச பற்றாளர்கள் என வீரவசனம் பேசியவர்கள் மௌனம் காப்பது வேடிக்கையாகவுள்ளது ஆகவே மக்கள் இவ்விடயம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar16

வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த சுமார் 30,000 இலங்கை

Jan25

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக ஒரு

Jan28

இலங்கையை கடுமையாக சாடும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணை

May08

குருணாகல் மாவட்டத்தின் குலியாப்பிட்டிய காவல்துறை அத

Feb18

இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியொ

Sep20

வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள

Jan27

நுவரெலியா- உடபுஸ்ஸலாவ,டெல்மார் கீழ் பிரிவில் ஏற்பட்ட

Oct08

இலங்கையில் இருந்து 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமா

Jun26

நாட்டில் அமுலில் இருந்த பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்

Mar21

இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாது என இ

Mar06

இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏ

Jul13

அத்தியாவசிய சேவைகளுக்காக மாகாணங்களுக்கிடையிலான போக்

Apr30

இலங்கையின் 33ஆவது பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய மஹிந

Sep17

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் டெங்கு நோயாளர்களின்

Mar07

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் பொது இடங்களில

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 01 (02:59 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 01 (02:59 am )
Testing centres