கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பிலான விவாதம் இன்று (19) நாடாளுமன்றில் ஆரம்பமாகவுள்ளது.
இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ள இந்த விவாதத்தின் பின்னர், நாளை பிற்பகல் 4 மணிக்கு குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில், கலந்துரையாடுவதற்கான விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்று நேற்று இடம்பெற்றது.
கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது. சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை, பிரதமநீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில், கடந்த மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகி, 23ஆம் திகதி நிறைவடைந்தது.
இந்தநிலையில், உயர்நீதிமன்றின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், அதனை அவர் நேற்று சபையில் அறிவித்தார்.
இதன்படி இன்று ஆரம்பமாகின்ற நாடாளுமன்ற விவாதத்தின் போது, அரசாங்கம் குறித்த சட்டமூலத்திற்கான திருத்தங்களையும் முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்ப
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வ
75 ஆண்டுகளாக தீர்த்து வைக்க முடியாத இன பிரச்சினையை எதிர
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் தரவுகளின்படி
இலங்கையில் கையிருப்பில் உள்ள பைசர் தடுப்பூசிகள் எதிர
உலக சமாதான தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்றைய
இலங்கை அதிபர், பிரதமர் ஆகியோர் பதவி விலகக்கோரி நேற்று 1
கொரோனா தொற்றினால் உயிரிழந்த வைத்தியர் கயான் டந்தநாரா
கொழும்பு - கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித
நாடு தற்போதைய பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடு
பாணந்துறையில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள கற்பாற
ராஜபக்ஷக்கள் உகண்டாவிற்கு எடுத்துச் சென்றதாகக் கூறப
இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியொ
யாழில் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக
மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் 2 வாரத்தி
