மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகள் 2020, நவம்பர் மாதம் 26-ம் தேதி முதல் டெல்லி எல்லையில் முற்றுகை போராட்டத்தைத் தொடங்கினர்.
இந்நிலையில், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தொடங்கிய போராட்டம் ஆறு மாதங்கள் நிறைவடைவதை முன்னிட்டு வரும் 26-ம் தேதி கறுப்பு தினமாக அனுசரிக்கப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, விவசாய சங்கங்களின் தலைமை அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் தலைவர் பல்பீர் சிங் ரஜவல் கூறியதாவது:
வரும் 26-ம் தேதியுடன் எங்கள் போராட்டம் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவடைகிறது. இதை குறிக்கும் வகையிலும், பிரதமராக மோடி பதவியேற்று அன்றுடன் ஏழு ஆண்டுகள் முடிவடைவதையொட்டியும் 26-ம் தேதி, கறுப்பு தினமாக கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்று நாடு முழுதும் உள்ள மக்கள், தங்கள் வீடு, கடை, வாகனங்களில் கறுப்புக்கொடி ஏற்றி, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்ப பெறாத வரை எங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.
திருமண நிகழ்வின் போது திடீரென மணப்பெண்ணை மாப்பிள்ளை அ
நாடாளுமன்ற மழைக்காலக்
கொரோனா இரண்டாம் அலையின் கோரதாண்டவத்தை நாட்டு மக்கள் ய கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாடு முக்கிய கட்டத நாட்டின் தேசிய பறவையான மயில் உயிருக்கு போராடிய நிலையி முழு ஊரடங்கு காரணமாக ஆட்டோ, கார் உள்பட அனைத்து போக்குவ உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ‘கன்வர் யாத சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன் பகுதியில் தமிழர தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவாகும் ஓட்டுப்பதிவு எந்த நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ர தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 மாத காலமாக ம தமிழகத்தில் ஜனவரியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பய முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி திமு மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக -அதிமு
