ஆந்திர பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் மாமில்லப்பள்ளி கிராமத்தில் சுண்ணாம்பு சுரங்கம் ஒன்று உள்ளது. இங்கு ஜெலாட்டின் குச்சிகளை ஏற்றிக்கொண்டு வாகனம் ஒன்று வந்தது. சுரங்க தொழிலாளர்கள் சிலர் அதில் இருந்த ஜெலாட்டின் குச்சிகளை இறக்கி வைத்துள்ளனர்.
இதில், திடீரென அவை வெடித்து, அடுத்தடுத்து பரவி பாதிப்பு ஏற்படுத்தின. இந்த வெடிவிபத்தினால் அருகிலுள்ள கிராமங்களும் அதிர்ந்துள்ளன.
இதுதொடர்பாக, கடப்பா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்புராஜன் கூறுகையில், ஜெலாட்டின் குச்சிகள் அனைத்தும் புத்வெல் நகரில் இருந்து கொண்டு வரப்பட்டன. இந்த சுண்ணாம்பு சுரங்கம் உரிமம் பெற்று இயங்கி வருகிறது. ஜெலாட்டின் குச்சிகளை இறக்கி வைக்கும்பொழுது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களில் பலர் புலிவேந்துலா என்ற முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சொந்த கிராம மக்கள் என கூறப்படுகிறது.
வெடிவிபத்து நடந்தபொழுது 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது.
வெடி விபத்தில் இறந்தோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்தார்.
உலகம் முழுவதையும் ஓராண்டுக்கும் மேலாக தனது கட்டுப்பா
உலக அளவில் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில் இந்தியா 4-வ
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த முன்னாள் அதிமுக அ
பிம்ஸ்டெக் அமைப்பில் இந்தியா, இலங்கை ,வங்கதேசம், மியான
மகாராஷ்டிராவில் கொள்கை முரண்பாடு கொண்ட சிவசேனா, தேசிய
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண
தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இன்று (செவ
இந்தியா 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 1.3 ஜிகாவோல்ட் சூரி
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு இன்று 72-வது பிறந்த
இந்தியாவில் மகன், மருமகள் மற்றும் இரண்டு பேத்திகளை வீ
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவ
1, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் அங்கீகாரம் இல்லாத
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று நேற்ற
இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் “ரான்சம்வேர்&
கிழக்கு லடாக்கில் பல இடங்களில் எல்லை கோட்டை தாண்டி சீ
