கொரோனாவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ளது. நாடு முழுக்க கொரோனா தொற்றால் பாதிக்கபடுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சிறுவன் முகக்கவசம் வினியோகம் செய்யும் புகைப்படம் சோக கதையுடன் வைரலாகி வருகிறது.
பணம் இல்லாதவர்களுக்கு புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் இலவசமாக முகக்கவசம் வழங்குவதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் இதனை தன் தாய் கூறியதால் செய்து வருவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அதனுடன் வலம்வரும் சோக கதை உண்மையில்லை என தெரியவந்துள்ளது. புகைப்படத்தில் இருப்பது ஏழு வயதான சிறுவன் ஆகும். இந்த சிறுவன் தனது சகோதரர் உடன் இணைந்து பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் வீதியில் நின்று முகக்கவசம் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இந்த சிறுவனின் புகைப்படம் பல்வேறு பாகிஸ்தான் வலைதளங்கள் மற்றும் சர்வதேச வலைதளங்களில் பதிவிடப்பட்டு இருக்கிறது. உண்மையில் இந்த புகைப்படத்தை செய்தி நிறுவனம் ஒன்று எடுத்து இருக்கிறது. அந்த வகையில் வைரல் புகைப்படத்திற்கும் அதனுடன் வலம்வரும் கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசும் ப
இமாசல பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் நேற்று த
பேஸ்புக் மூலம் அறிமுகமாகி கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில்,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள
இந்தியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள உத்தரபிரத
பிக்பாஸ் பிரபலம்
தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லுனராக கருதப்படுபவ போர் தீவிரமடைந்து வருவதால் உக்ரைனில் இருந்து உடனடியா கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை அடுத்துள்ள சிஜர்சி என்ற கர்நாடக முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்து எடியூரப் தமிழகத்தில் 187 தொகுதிகளில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலி இந்தியாவில் பிச்சை எடுத்து கொண்டிருந்த இளம்பெண் தற்ப இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள
