மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரம் மற்றும் வாக்குப்பதிவின்போது ஆங்காங்கே மோதல் ஏற்பட்டது. பாஜகவும், திரிணாமுல் காங்கிரசும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டிவருகின்றனர்.
இந்நிலையில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பானிஹாதி தொகுதியில் உள்ள பாஜக முகாம் அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி மர்மநபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் வெடிக்காத ஒரு குண்டை கைப்பற்றினர்.
உள்ளூரைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரசார் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக பாஜக குற்றம்சாட்டியது. ஆத்திரமடைந்த பாஜகவினர் திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.
இந்த தாக்குதல்பற்றி பாஜக வேட்பாளர் சன்மோய் பானர்ஜி கூறுகையில், தேர்தலில் தோல்வி அடைவது தெரிந்துவிட்டதால் திரிணாமுல் காங்கிரசார் தாக்குதலை தொடங்கியிருக்கிறார்கள், என குற்றம்சாட்டினார்.
தினக்கூலி வேலை பார்க்கும் கேரளாவைச் சேர்ந்த 60 வயது முத
தளர்வுகளற்ற பொதுமுடக்கம் நாளை அமலுக்கு வருவதையொட்டி,
இமாசல பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் நேற்று த
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் , அரசுமுறைப் பயண
சட்டமன்ற தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.
பாராலிம்பிக் உயரம் தாண்டுத
மகாராஸ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள மருத்துவமனை ஒன்ற
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா அதிவேகமாக
தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை பொது ஏலம்
மறைந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.ப
மேற்கு வங்காள சட்டசபையில் கடந்த 2-ந் தேதி கவர்னர் ஜெகதீ
பான் எண்ணை (நிரந்தர கணக்கு எண்) ஆதார் எண்ணுடன் இணைப்பதற
ஒன்றிய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டத்தை கிண்டல் ச
தமிழக சட்டசபை தேர்தலில்
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியா
