நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்படும் மருத்துவ ஆக்சிஜனுக்கு நாட்டின் பல பகுதிகளில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து தொழில்துறைகளுக்கு ஆக்சிஜன் வினியோகிப்பதை மத்திய அரசு தடை செய்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ‘அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக, மருத்துவ ஆக்சிஜனின் தேவையும் கடுமையாக அதிகரித்து இருக்கிறது, குறிப்பாக அதிக நோயாளிகள் கொண்ட மாநிலங்களான மராட்டியம், மத்திய பிரதேசம், குஜராத், டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் இதன் தேவை அதிகமாக உள்ளது. எனவே இது குறித்து ஆய்வு செய்த மத்திய அரசின் சிறப்பு குழுவினர், தொழில்துறைக்கு வழங்கப்படும் ஆக்சிஜனை மருத்துவத்துறைக்கு திருப்பி விட பரிந்துரைத்துள்ளனர்’ என கூறியுள்ளார்.
அந்த பரிந்துரைப்படி, வருகிற 22-ந் தேதி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை, 9 குறிப்பிட்ட துறைகளை தவிர பிற தொழில்துறைகளுக்கு ஆக்சிஜன் வினியோகிப்பதற்கு உற்பத்தியாளர் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது என கூறியுள்ள அஜய் பல்லா, இந்த அடிப்படையில் அந்தந்த துறையினருக்கு தகுந்த அறிவுறுத்தல்களை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்றும் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் பொதுப்பணித
ஆட்கொல்லி கொரோனாவை ஒழிப்பதற்காக பல்வேறு உலக நாடுகளைப
பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த
இந்தியாவில் பிச்சை எடுத்து கொண்டிருந்த இளம்பெண் தற்ப
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக அஜய் பாது நி
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப
பிரதமர் மோடி, ஆட்சியின் தலைவராக தொடர்ந்து 20 ஆண்டுகள் ப
வடகிழக்கில் பல்வேறு இனக்குழுக்களின் பயங்கரவாதத்தை ம
முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா த
தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டத
தமிழக முதல்வராக கடந்த மே மாதம் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றா
சென்னை மெரினா கடற்கரை சாலை நேற்று காலை வழக்கம்போல் பர
கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க மக்களிடம் விழி
கொரோனா தொற்று பரவலால் சமீப காலமாக
டெல்லியில் முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான அரசு வ
