கோவையில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புகொடி காட்டி, போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை போலீசார் கைதுசெய்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்லை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று பாஜக சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று, அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி, கோவை மாவட்ட விமான நிலையம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் தாராபுரம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை பீளமேடு பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அந்த அமைப்பின் தலைவர் கோவை கு.ராமகிருஷ்ணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, பிரதமருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து, அவர்கள் அவினாசி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றனர். இதனை அடுத்து, போராட்டக்காரர்களை கைதுசெய்த போலீசார், அவர்களை வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதனால் பீளமேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் மேலும் 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய
அமெரிக்கா ஸ்பெல்லிங் பீ
அரசியல் ஆலோசகர்
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்க இந்தியாவின் 29 ஆவது சர்வதேச விமான நிலையமான குஷிநகர் சர் மத்திய அரசின் விவசாய திட்டங்கள் மற்றும் வேளாண் திட்டங பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நேற் இறைவனின் நேசத்துக்கு உரியவராக வர்ணிக்கப்பட்டவர் இப் பிம்ஸ்டெக் அமைப்பில் இந்தியா, இலங்கை ,வங்கதேசம், மியான அமராவதி: ஆந்திராவில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந இந்தியா: அரசு மருத்துவா்களின் முதல் பதவி உயா் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 சாலை மறியல் செய்த விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியட தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2-ம் தேதி முன்னாள் முதலமை
