தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக, அதிகாரிகளுடன் ஆட்சியர் செந்தில்ராஜ் ஆலோசனை நடத்தினார்.
சட்டமன்ற தேர்தலில், தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க செய்வது தொடர்பாக, அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான செந்தில்ராஜ் இன்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்ளும் விதமாக மாதிரி வாக்குப் பதிவை, ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார். இதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும் முறை குறித்தும், தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை விவிபேட் கருவி மூலம் அறிந்து கொள்ளும் விதமாகவும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் (பயிற்சி) சதீஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம் மற்றும் ஏராளமான மாற்றுதிறனாளிகள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்காக
இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்படும் என அ
2021-22 கல்வியாண்டு முதல் M.Phil படிப்பு ரத்து செய்யப்படுவதாக&n
தமிழக ஆளுநரின் கான்வாயை நோக்கி கருப்புக் கொடிகளை வீசி
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளான நிஹார
2007-ம் ஆண்டில் மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வ
சசிகலா த
வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (வயது 74). 3 ம
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் இலங்க
இமாசல பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் நேற்று த
மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்ப
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில
காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், சோனியா காந்தி மகளும
