மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்றும் நோக்கில் வாகரை பிரதேச செயலகத்தினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தினை முன்னேற்றும் நோக்கில் தொழில் முயற்சிக்கான உபகரண உதவிகள் செயலக கேட்போர் கூடத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.அழகுராஜின் ஒருங்கிணைப்பில் பிரதேச செயலாளர் எஸ்.ஹரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் செயலக சமூகசேவை உத்தியோகத்தர் அ.நஜீம், வெளிநாட்டு பணியக உத்தியோகத்தர் எஸ்.சயனொளி, சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.புலேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது மீட்சி அமைப்பின் நிதி உதவி மூலம் பாரம்பரிய உணவு உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை சேர்ந்த எட்டு (08) பெண்களுக்கு உணவு உற்பத்தி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதாக பிரதேச செயலாளர் எஸ்.ஹரன் தெரிவித்தார்.


ஊடகவியலார்களுக்காக நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் தே
இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து 200 மில்லிய
இலங்கையில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அல்லது
சுமந்திரனால் முன்னெடுக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்ட
பெரும்போகத்திற்கு தேவையான சேதனப் பசளையை பற்றாக்குறை
நாட்டின் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வ
மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் நிலையில், ஹிட்லர் போன்
அண்மை நாட்களில் டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறு
நாட்டில் நேற்று(23) வீதி விபத்துக்களால் 8 பேர் உயிரிழந்த
வடக்கு மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து வழமைக்க
யாழ்.பருத்துறை துன்னாலை - குடவத்தை பகுதியில் உள்ள கோ
இயேசு மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தமையை மகிழ்வுட
இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் அர்த
தென்னிலங்கையில் தாய் ஒருவரை கொலை செய்ய முயன்ற மகள் பொ
