மதுராந்தகம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
சென்னை அடுத்த பூந்தமல்லி பகுதியை சேந்தவர் சுப்பிரமணி. இவர் தனது மனைவி இந்திராணி, மகள் மகாலட்சுமி மற்றும் உறவினர்கள் இருவருடன் நேற்று திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சென்றார். சுவாமி தரிசனம் முடித்து நேற்றிரவு 5 பேரும் காரில் புறப்பட்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்றபோது கார் எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரியின் மீது அதிவேகமாக மோதியது. இதில் காரில் பயணித்த சுப்பிரமணி, இந்திராணி, மகாலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த மேலும் இருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர். விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாடு முழுவதும்
கிழக்கு லடாக்கில் கடந்த மே மாதம் ஏற்பட்ட பதற்றம், அதைத தமிழக பா.ஜ.க. தலைவர்
அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எழுவர் விடுதலையில் முடிவெடுக்க தனக்கு அதிகாரமில்லை எ தமிழகத்தில் திருநங்கையாக மாறிய மகனுக்கு அனைவர் முன்ன ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கும் சுமார் 400 பேருக்கு பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளான நிஹார மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவுதினம் பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் விலை இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங் சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை ப டாக்டர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, முதல்-அமைச டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிடுவேன் என்று விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே
