அக்கரைப்பற்றில் பிறந்து கல்முனையை வதிவிடமாகவும் கொண்ட சிரேஷ்ட சட்டத்தரணி தாஹா செய்னுதீன் நேற்று (05) மாலை கொழும்பில் காலமானார்.
இவரது ஜனாஸா நல்லடக்கம் நேற்று (05) கொழும்பு 07 ஜாவத்தை மையவாடியில் இடம்பெற்றது.
அக்கரைப்பற்றில் 1940ஆம் ஆண்டு மார்ச் மாதம் 04ஆம் திகதி பிறந்த அவர். அக்கரைப்பற்று மெதடிஸ்ட் மிசன் மற்றும் ரோமன் கத்தோலிக்க கல்லூரி, மட்டக்களப்பு மெதடிஸ்ட் மத்திய கல்லுாரி ஆகியவற்றில் தனது ஆரம்பக் கல்வியை தொடர்ந்தார்.
1959ஆம் ஆண்டு இலங்கை சட்டக் கல்லுாரியில் நுழைந்த அவர், 1965இல் உயர் நீதிமன்ற சட்டத்தரணியானார். 1974இல் பதில் நீதிபதியானார். 1975ஆம் ஆண்டு முதல் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில், கிழக்கு மாகாண குடியியல் வழக்குகளில் ஆஜராகி வந்தார்.
1984/85 காலப் பகுதியில் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக தெரிவான இவருக்கு, அவரது சேவையை பாராட்டி கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தினால் 2015இல் கௌரவிக்கப்பட்டார்.
சுமார் 56 வருட காலம் கிழக்கின் அனைத்து நீதிமன்றுகளிலும், குடியியல் வழக்குகளில் ஆஜராகியிருந்தார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான இவருக்கு மூன்று சகோதர, சகோதரிகள் உள்ளனர். இவரின் சகோதர்களில் ஒருவர் அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலய முன்னாள் அதிபர் ஹாறூன் என்பதோடு, மர்ஹூம் இக்பால் ஆசிரியர், மர்ஹூம் றக்கீபா ஆசிரியை ஆகியோர் இவரது ஏனைய சகோதர சகோதிகளாவர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்தின் பனிச
இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு தொகுதி அஸ்ட்ராசெனகா க
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்தொழில் ஈடுபட்டிந்தபோத
ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அத்தியாவசிய தேவைகளுக்காக ம
சமையல் எரிவாயுவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை குறி
'கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்க
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரமடைந்துள்ள நில
ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலயில் ஏற்றுமதிக்கு பதப்படுத்
ஏழு ஆண்களை தகாத முறையில் துன்புறுத்திய வலப்பனை பிரதேச
எவ்வித காரணங்களும் இல்லாமல் கொழும்பு நகருக்குள் நேற்
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரை
நோயாளி ஒருவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு மு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஓய்வுபெறும் சட்டமா அதிபர
அரசாங்கத்தையும், எதிர்க்கட்சியினையும் மக்கள் நிராகர
மன்னார் மாவட்டத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் அற
