வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா தான் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என்பதால் தான் அவர் காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டது. அதிமுகவை மீட்டெடுக்கவே அமமுக கட்சி தொடங்கப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் சசிகலா தான் அதிமுக பொதுச்செயலாளர். சட்டப் போராட்டம் தொடரும். அதிமுக கொடியை பயன்படுத்த அவருக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்று கூறினார்.
கடந்த 27ம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்ட போது அவரது காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சசிகலா சிறைக்கு சென்றவுடனே கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அதிமுக கொடியை அவர் பயன்படுத்த உரிமையில்லை என போர்க்கொடியை உயர்த்தினர்.
இந்த நிலையில் தான், அதிமுக கொடியை பயன்படுத்த எல்லா உரிமையும் உள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலா பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்ததிற்கே இவ்வளவு பிரச்னை என்றால், தமிழகம் வந்தால் அரசியல் களத்தில் ‘ஒரு சம்பவமே காத்திருக்கு’ என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் நலத்திட்டங்களை தொடங்கி
ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்கள
இந்தியாவில் பல மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின
திரிபுரா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக பதவி வகித்தவர்
ரஷ்யா-உக்ரைன் போரின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைக
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்ச
கேரளாவில் கம்யூனிஸ்டு கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இடைய
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந்தேதி பதவியேற
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, ஸ்டார் ஓட்டல்கள், ரி
தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூ
சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசும் ப
கொரோனா நோய்த் தொற்று காரணமாக 2020-ம் ஆண்டுக்கான நீட் மற்ற
பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14 ஆம் திகதி சென்னை வர
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலை
கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் கட்டுப்பா
