பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உடல் நிலை மோசமாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது.
இவ்வாறு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் உடல் நிலை, கடுமையாக மோசமடைந்துள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள பின்னணியிலேயே, பிரதமர் ஊடகப் பிரிவு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தனது நாளாந்த அலுவல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் உடல் ஆரோக்கியம் குறைவடைந்துள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் கிடையாது என பிரதமர் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கும் இடையே சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்தும் விதம் குறித்து, இதன்போது கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 750 மில்ல
இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாது
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் தொல்பொருள் திணைக்க
பூநகரி கௌதாரிமுனைக்கு இன்று(14.07.2021) விஜயம் மேற்கொண்ட கடற
வவுனியாவில் 22 வயதுடைய இளம் குடும்ப பெண் ஒருவரை காணவில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் பிரதமர்
ஆசிரியர்களை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு செ
விஸ்கி அருந்திக்கொண்டு அமைச்சர்களுடன் கலந்துரையாடுவ
அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னண
இலங்கையின் மூத்த கல்வியியல் பேராசிரியர் சோ.சந்திரச
பருத்தித்துறை தும்பளையில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒ
இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்
திக்வெல்ல - பெலியத்த பிரதான வீதியில் வலஸ்கல பகுதியில்
நாட்டில் இதுவரை 2,472,807 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத
யாழ்ப்பாணத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 11
