Back
  • All News
  • மும்பையில் ஆதித்ய தாக்கரே மீது வழக்கு...
மும்பையில் ஆதித்ய தாக்கரே மீது வழக்கு!...
Nov 18
மும்பையில் ஆதித்ய தாக்கரே மீது வழக்கு!...



அதிகாரப்பூர்வ அனுமதியின்றி லோயர் பரேலில் டெலிஸ்லே பாலத்தின் 2-வது பாதையை திறந்து வைத்ததற்காக சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் தலைவர் ஆதித்ய தாக்கரே மீது மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

மும்பையின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில், டெலிஸ்லே பாலம் கட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில், தெற்கு மும்பையையும் லோயர் பரேலையும் இணைக்கும் வகையிலான இப்பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டது. தொடர்ந்து, கரி ரோட்டை லோயர் பரேலுடன் இணைக்கும் மற்றொரு பகுதி செப்டம்பரில் திறக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பாலத்தின் மீதமுள்ள வேலைகள் நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட பாலம் முடிவடையும் நிலையில் இருந்தாலும், பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது என்று இன்னும் சான்றளிக்கப்படவில்லை. இந்த சூழலில், இப்பாலத்தின் 2-வது பகுதியை அப்பகுதியின் எம்.எல்.ஏ.வான ஆதித்ய தாக்கரே திறந்து வைத்திருக்கிறார்.

இதையடுத்து, ஆதித்ய தாக்கரே மீது பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பி.எம்.சி.) சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அப்புகாரில் பாலம் இன்னும் முழுமையடையாததோடு, பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது என்றும் சான்றளிக்கப்படவில்லை. அப்படி இருக்க, பாலத்தை திறந்து வைத்த ஆதித்ய தாக்கரேவின் செயல் சட்டவிரோதமானது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், பாலத்தை முன்கூட்டியே பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்தும் குடிமை அமைப்பு கவலை தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, ஆதித்ய தாக்கரே, சுனில் ஷிந்த் மற்றும் சச்சின் அஹிர் ஆகியோருக்கு எதிரான இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.) 143, 149, 336 மற்றும் 447 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov15

10, 12 வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளத...

Nov13

மது விற்பனை மூலம் தமிழ்நாடு அரசுக்கு ரூ.467.69 கோடி வருவாய் கிடை...

Nov26

சென்னை மெரினாவில் வாரந்தோறும் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்ப...

Nov08

230 இடங்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டசபையின் பதவிக்காலம் ஜனவர...

Nov30

குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ) கண்டிப்பாக செயல்படுத்தப்படும் ...

Nov13

குஜராத் மாநில வக்ஃப் வாரியம் கலைக்கப்பட்ட 10 மாதங்களுக்குப் பிற...

Nov02

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று லே-யின் சிந்து படித்துறைய...

Nov12

ராமர் இருக்கும் இடமே அயோத்தி எனக் கூறப்படுகிறது. என்னை பொறுத்தவர...

Nov02

சென்னை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில், பாஜக கொடிக...

Nov02

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வடகிழக்கு மாநிலங்...

Nov27

மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தின் போது பிரதமராக மோடி...

Nov17

உஜ்வாலா பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு மானியமாக 450 ரூபாய் வழங்கப்...

Nov18

அதிகாரப்பூர்வ அனுமதியின்றி லோயர் பரேலில் டெலிஸ்லே பாலத்த...

Nov17

அமைச்சர் எ.வ. வேலுவின் பேச்சுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை க...

Nov08

தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்&...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (00:13 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (00:13 am )
Testing centres