உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு 307 ரன்களை
வங்காளதேசம் இலக்கு வைத்துள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் முடிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் அணிகள் புனேவில் விளையாடி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி பங்களாதேஷ் அணி பேட்டிங் செய்கிறது. பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக தஞ்சீத் ஹசன், லிட்டன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன்களைக் குவித்தனர். போட்டி முடிவில் வங்காளதேசம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்களை குவித்தது.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy