5 லட்சத்துக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் இருவர் கைது
கற்பிட்டி - இரம தீவு பகுதியில் 5 இலட்சத்து 70 ஆயிரம் Pregabalin எனும் வகையைச் சேர்ந்த போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று (9) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கற்பிட்டி - நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 39 வயதுடைய இருவரே இவ்வாறு சட்டவிரோதமான முறையில் போதை மாத்திரைகளை நாட்டுக்குள் கொண்டுவந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களாவர்.
இரம தீவுப் பகுதியில் இருந்த டிங்கி இயந்திர படகு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 பெட்டிகளில் மாத்திரைகள் காணப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவர் மற்றும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 5 இலட்சத்து 70 ஆயிரம் போதை மாத்திரைகள் என்பன புத்தளம் மாவட்ட போதை ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy