இன்றும் தொடரும் தபால் ஊழியர்களின் பகிஸ்கரிப்பு...!
நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்து வரும் நிலையில் திருகோணமலை- தோப்பூர் அஞ்சல் அலுவலக ஊழியர்களும் பணிபகிஷ்கரிப்புக்கு ஆதரவு வழங்கும் வகையில் 2வது நாளாகவும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
திருகோணமலை -தோப்பூர் அஞ்சல் அலுவலக ஊழியர்கள் இன்றும் (09) இரண்டாவது நாளாகவும் பணிக்கு சமூகமளிக்காததால் அஞ்சல் அலுவலகம் திறக்கப்படாத நிலையில் மூடிக் காணப்பட்டது.
தோப்பூர் அஞ்சல் அலுவலகத்தின் நுழைவாயிலில் பணிபகிஷ்கரிப்புக்கான காரணம் குறித்த வாசகம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நுவரெலியாவிலுள்ள பிரதான தபால் நிலையத்தை ஹோட்டலொன்றுக்கு வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தபால் ஊழியர்கள் இந்த 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy