Back
  • All News
  • யாழில் இரு தரப்புக்கிடையே மோதல்..! பல...
யாழில் இரு தரப்புக்கிடையே மோதல்..! பல ஆயிரம் ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம்
Nov 09
யாழில் இரு தரப்புக்கிடையே மோதல்..! பல ஆயிரம் ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம்



யாழ். கோப்பாய் மத்தி கிராமத்தில் இரண்டு தரப்புகளுக்கு இடையே இரண்டு நாட்களாக நீடித்த மோதல் நிலையைக் கட்டுப்படுத்த கைது செய்யப்பட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 23 பேரை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட கோப்பாய் மத்தி கிராமத்தில் இரண்டு தரப்புகளுக்கு இடையே சில நாள்களாக நீடித்த முரண்பாடு மோதலாக மாறிய நிலையில் பல ஆயிரம் ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டன.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த போது, இரண்டு தரப்பிலுமாக 3 பெண்கள் உள்ளிட்ட 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

நபர்களைத் தாக்கியமை, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் 23 பேருக்கும் எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நேற்று முற்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் பொலிஸாரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, 23 பேரையும் வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (01:12 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (01:12 am )
Testing centres