நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வு.
இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழரின் இணைப்பாட்சி (சமஷ்டி) தோற்றம் பெற்று ஓராண்டு பூர்த்தி செய்வதை முன்னிட்டு வரலாற்று ஆவணப்படுத்தலும், கண்காட்சியும் பிரதான சுடர்கள் ஏற்றும் நிகழ்வும் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு மாகாணத்தின் 08 மாவட்டங்கள் தழுவிய சிவில், சமூக செயற்பாட்டாளர்களால் பிரதான சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன.
வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் , இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் வடமாகாண தலைமை அமைப்பாளர் , வடக்கு கிழக்கு மாகாணத்தின் 08 மாவட்ட தழுவிய சிவில், சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் எனப் பலரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy