கிளிநொச்சி தருமபுரம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அனுமதிப்பத்திரத்திற்கு முரணான வகையில் அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் 4 டிப்பர் வாகனங்கள் சிக்கியுள்ளதுடன் சாரதிகளும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட டிப்பர் சாரதிகளான சந்தேகநபர்கள் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனங்களை இன்று புதன்கிழமை (08) கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தர்மபுர பொலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி டி .எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy