கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் குறித்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள தனியாரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து நேற்று இரவு மேற்கொண்ட சோதனையின்
போது பொலிசார் 47 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளதுடன், சந்தேசத்தின் பேரில் 44 வயதுடைய சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தொடந்தும் விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், சான்று பொருட்களையும், சந்தேக நபரையும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy