மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாப்பொல சந்தியில் வைத்து முச்சக்கர வண்டியும் -அரச கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்து கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டனர்.
நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தெஹிவத்தை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் ஆண் ஒருவருமே படுகாயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy