ஊவாபரணகம - மஸ்பன்ன கிராமத்தில் உள்ள வீடொன்றில் கட்டில் ஒன்றைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மரத்தினாலான தடுப்பில் சிக்கி ஏழு மாத பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
மஸ்பன்ன, வெலேக்கடே பகுதியில் ஹர்ஷனி மதுஷிகா என்ற ஏழு மாத பெண் குழந்தையே படுக்கையில் இருந்து தடுப்பு பட்டிக்குள் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த குழந்தையின் தாய் வீட்டில் வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில், குழந்தை உறங்கிக் கொண்டிருந்த படுக்கைக்கு அருகில் வந்து பார்த்தபோது, கட்டிலைச் சுற்றியிருந்த மர தடுப்பில் குழந்தை மாட்டிக்கொண்டுள்ளது.
இதையடுத்து குழந்தை மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தியத்தலாவை ஆரம்ப வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊவாபரணகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எஹலியகொட பிரதேசத்தில் பாடசாலை மாணவியான பத்து வயது சிற
யாழ் மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரையான காலப்பகுத
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து வெளிநா
ஜெனிவா கூட்டத்தொடருக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை எ
நாடாளுமன்றத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி.
அவப்பெயருடனும் அழிவுடனும் கோட்டாபய அரசு நிறைவுக்கு வ
ஒவ்வொரு கிராமத்தையும் உள்ளடக்கும் வகையில் பொதுமக்கள
புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இ
கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவ
பைஸர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஐந்து மாணவிகள் சுகவீ
வடக்கு, கிழக்கில் எந்தவொரு பகுதியையும் தமிழ் மக்களின்
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தின
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட
மன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதி
குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பாக யுனிசெஃப் முன்னர
