மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் இன்று முதல் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடு படாமல் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் தங்களுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக நேற்று கூடி ஆராய்ந்த போது ஏகமனதான தீர்மானத்திற்கு அமைவாக இன்று தொடக்கம் எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தற்காலிகமாக நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் பணி பணி பகிஷ்கரிப்பு முன்னெடுப்பதாக தீர்மானம் மேற்கொண்ட நிலையில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் மன்னார் மேல் நீதிமன்றம், மன்னார் நீதவான் நீதிமன்றம், மன்னார் மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகளில் சமூகம் அளிக்கவில்லை.
சட்டத்தரணிகள் முன்னெடுத்திருக்கும் பணி பஸ் கரிப்பு தொடர்பாக நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் கடிதம் ஒன்றை அனுப்பியதுடன் அதன் பிரதிகள் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், மன்னார் மாவட்ட இமாகாண மேல் நீதிமன்றம், மன்னார் மாவட்ட நீதிமன்றம் மன்னார் நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றிற்கு கடிதத்தின் பிரதிகள் அனுப்பி வைத்துள்ளனர்.
இன்று மன்னார் மேல் நீதிமன்ற, நீதவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்ற நடவடிக்கை இடம் பெற்ற போது மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் எவரும் நீதிமன்றங்களுக்கு சமூகமளிக்கவில்லை.
குறித்த பணி கரிப்பு நடவடிக்கை மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோள விதைக
வவுனியாவில் வீதிகளில் முகக்கவசங்கள் அணியாமல் உரிய மு
தீபாவளிப் பண்டிகையானது அனைவரது அபிலாசைகளையும் பூர்த
நபர் ஒருவரிடம் கோழி உரிக்கக் கொடுத்த கட்டட ஒப்பந்தகார
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இலங்கை
தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம
அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம
பயணிகளில் பலர் அத்தியாவசிய சேவை ஊழியர்கள் அல்ல என்பது
மருத்துவர்கள், சுகாதார நிபுணர்களின் வேண்டுகோளின்படி &
பத்தரமுல்ல பிரதேசத்தில் பெண்ணொருவர் பொலிஸாரால்
ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் (Prof. G L Peiris) இந
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் அரசியல் ஸ்திரத
அரசியலமைப்பின் உத்தேச 22 வது திருத்தம் தொடர்பாக நாடாளு
மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை பிரதி முகாமையாள
முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழரசு கட்சியின் மத்திய ச
