வடக்கு – கிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் 50 ஆவது தினத்தை முன்னிட்டு இன்று மன்னார் கீரி கடற்கரை பகுதியில் கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி பட்டம் ஏற்றப்பட்டது.
கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல் எனும் தொனிப் பொருளில் வடக்கு – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெற உள்ள செயற் திட்டத்தின் 50 ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் மன்னார் கீரி கடற்கரை பகுதியில் காலை இடம்பெற்றது.
சிறுவர்கள் பொது மக்கள் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பெண்கள் இணைந்து தமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.
மேலும் பறக்கவிடப்பட்ட பட்டங்களில் எங்கள் நிலம் எமக்கு வேண்டும்இ நடமாடுவது எங்கள் உரிமை பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமைஇ ஒன்று கூடுவது எங்கள் உரிமை உள்ளிட்ட வசனங்கள் எழுதப்பட்டு பறக்கவிடப்பட்டது.
குறித்த நிகழ்வில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் எஸ்.திலீபன் கிராம மட்ட அமைப்பினர் விவசாய மீனவ சங்கங்க பிரதிநிதிகள் பெண்கள் அமைப்பினர் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மனித உரிமை ஆர்வலர்கள் வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டம் வடக்கு-கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் 100 நாட்கள் வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சப்ரகமுவ, மேல், தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் ச
பா.ஜனதா மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப
மன்னார் மாவட்டச் செயலகத்தின் 2022 ஆண்டுக்கான வாணிவிழா ந
2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற
இராணுவத்தினரால் நடத்தப்படும் 94 தனிமைப்படுத்தல் நிலைய
|
இலங்கையில் வாக Jul13
நாட்டில் மேலும் 3 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேகவ Apr03
கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 இலட்சம் பீப்பாய்க்க Mar27
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர், யூரி மேட்டரி பாதுகாப்பு செய Jun25
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல Oct23
22 ஆவது திருத்தும் அமுலாகியுள்ள நிலையில் தற்போது இயங்க Feb09
சவால்களுக்கு மத்தியில் நாட்டில் பல்வேறு கடுமையான தீர Oct16
நாட்டின் பொருளாதார பயணத்தை நம்பகமான எதிர்காலமாக விவச May23
வவுனியா புளியங்குளம் பகுதியில் காயமடைந்த நிலையில் Jul27
24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச் தமிழ் சினிமாசிறப்பானவை
![]() Sri Lanka
World
|