More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையை பகடைக்காயாக பயன்படுத்துகின்றன- சார்ள்ஸ்
அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையை பகடைக்காயாக பயன்படுத்துகின்றன- சார்ள்ஸ்
Sep 19
அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையை பகடைக்காயாக பயன்படுத்துகின்றன- சார்ள்ஸ்

தமிழர்களின் விடையங்களை பயன்படுத்தி அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையை பகடைக்காயாக பயன்படுத்துகிறது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.



மன்னாரில் இன்று  காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்  ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் மனித உரிமை உதவி ஆணையாளர் இலங்கை தொடர்பான பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.



வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் இலங்கை அரசாங்கத்தினால் நீண்ட காலமாக துன்புறுத்தப்பட்டு கடைசியாக 2009 ஆம் ஆண்டு தமிழ் இனத்தை இனப்படுகொலையாக அழித்த சம்பவங்கள் தொடர்ச்சியாக சர்வதேச நாடுகள் ஊடாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு வரும் என்று நம்புகின்றார்கள்.



ஆனால் சர்வதேச நாடுகளை பொருத்தவரையில் இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்காக தமிழர்களின் விடையங்களை பயன்படுத்தி அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதற்கு பகடைக்காயாக பயன்படுத்துவதாக நான் பார்க்கின்றேன்.



சர்வதேச விசாரணை வேண்டும் என்று தொடர்ச்சியாக தாயகம் புலத்தில் இருக்கின்ற சகல தரப்பினரும் ஒன்றிணைந்து ஒருமித்து கோரிக்கை முன் வைத்த போதும்இ ஐ.நா.மனித உரிமைகள் பேரவையை கையாளுகின்ற நாடுகள் ஒரு மென் போக்கை கடைபிடித்து வருகிறது.



தற்போது வந்துள்ள பரிந்துரையில் பல விடையங்கள் இருந்தாலும் தீர்மானம் ஒன்று நிறைவேறும் போது பிரேரணை எந்தவித பயனும் இல்லாத ஒன்றாக காணப்படும்.



இலங்கை அரசாங்கம் ஐ.நாவில் எப்படியான தீர்மானங்களை நிறைவேற்றினாலும் இலங்கை அரசாங்கம் இவ்வளவு காலமும் ஐ.நா.பரிந்துரைகளுக்கும் தீர்மானங்களையும் நிறைவேற்ற எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.



தற்போதைய பரிந்துரையின் போது அமைச்சர் அலி சப்ரிஇ அதற்கு உடன் படமாட்டோம் என்று கூறியிருக்கிறார்.



தொடர்ச்சியாக தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்ற ஒரு சூழ்நிலையும் மேற்குலக நாடுகளும் தமிழர் தரப்பை தொடர்ச்சியாக ஏமாற்றுகின்ற சூழ்நிலை தான் தொடர்ச்சியாக காணப்படுகின்றது- என அவர் மேலும் தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar28

நாட்டு மக்கள் உணவுக்கு முக்கியத்தும் கொடுக்காமல் நாட

Oct20

குத்தகை தவணையை செலுத்த அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை

Jan23

சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி

Feb10

  கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான யோகராஜா கலைவாணி எனும்

Sep27

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமா

Sep23

வவுனியாவில் கொரோனா தொற்றினால் இதுவரை உயிரிழந்தவர்கள

Feb04

குற்றவாளிகளை எவ்வித விசாரணையும் இன்றி விடுதலை செய்யு

Oct25

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வன்முறை கு

May29

மதுபான உற்பத்தி நிலையங்களில், இதுவரை கையிருப்பில் உள்

Sep22

அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகை தரும் ப

May26

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 97 பேருக்கு க

Sep29

வாய் முகம் மற்றும் தாடை சிகிச்சை சம்பந்தமான சிகிச்சை

Feb02

தனியார் பஸ் ஊழியர்கள் இன்று காலை முதல் வேலை நிறுத்தத்

Mar03

அநுராதபுரம், பூஜா நகருக்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றி

Oct03

மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு நடமாடும் வாக்களி

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 31 (21:18 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 31 (21:18 pm )
Testing centres