சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த கேரள அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எரிமேலி மற்றும் மணிமலை பகுதியில் உள்ள செருவேலி எஸ்டேட்டை விமான நிலையத்துக்காக கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், செருவேலி எஸ்டேட்டில் உள்ள நிலம் உட்பட 2,570 ஏக்கரில் சபரிமலை விமான நிலையம் அமைக்கப்பட உள்ள நிலையில் செருவேலி எஸ்டேட் பற்றிய வழக்கு நிலுவையில் உள்ளதால் நிலம் கையகப்படுத்துவதற்கான தொகையை நீதிமன்றத்தில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
செருவேலி எஸ்டேட்டுக்கு அருகில் உள்ள மேலும் 307 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை பக்தர்கள் வசதிக்காக அருகிலேயே புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என 2017-ல் கேரள அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், 2018-ல் சர்வதேச டெண்டர் கோரப்பட்டு ஆய்வு நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் தற்போது நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. எனவே, சபரிமலை விமான நிலையம் கேரளாவில் 5-வது விமான நிலையமாக இருக்கும்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை நொளம்பூர் பகுதியி
மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ராணுவ இணை மந
வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பொதுமக்களின் புகார்
குடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் போர் விமானங்கள் காட்
காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சண்டை ந தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று& இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து வரு 75-வது சுதந்திர தினத்தையொட்டி, தருமபுரி மாவட்டம் எர்பைய தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சி பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை எதிர்பாராத விதமாக ஒருவர தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட கடற்க துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்ன தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலையொட்டி, வாக்குச்சாவட
